வடமேற்கு பாகிஸ்தானில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் சிக்குண்டு 337 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், கைபர் பக்துன்வா மாகாணத்தில் 54 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வழமைக்கு மாறான காலநிலை சீற்றம், பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்தும் மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.









