முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மஹர நீதவான் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி காஞ்சனா என். சில்வா முன்னிலையில் பிரசன்ன ரணவீர இன்று (14) ஆஜர்படுத்தப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பிரசன்ன ரணவீர தாக்கல் செய்திருந்த பிணை மனுவையும் நீதிமன்றம் நிராகரிதுள்ளது.
கிரிபத்கொட பகுதியில் அரச காணி ஒன்றை மோசடி சம்பவம் தொடர்பாக பிரசன்ன ரணவீர எதிராக வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









