ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மது சாலி நளீம் பெயரிடப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவினால் அது குறித்த வர்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 2 ஆசனங்களை வென்றது. அதனடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைக்கப்பெற்றது.
இந்நிலையில் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மது சாலி நளீமை நியமிக்க கட்சி தீர்மானித்து ,பெயரை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிய நிலையில் வர்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
முஹம்மது சாலி நளீம் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் நகரசபை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.









