பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சராக பதவியேற்றுக் கொண்ட சுந்தரலிங்கம் பிரதீப் பத்தரமுல்லை செஸ்திரிபாயவிலுள்ள பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக உரிய ஆவணத்தில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். கடமை பொறுப்பேற்று ஆவணத்தை அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தியிடம் அவர் கையளித்தார்.
குறித் நிகழ்வில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி தொழிலமைச்சர் மஹிந்த ஜெயசிங்க , அமைச்சின் அதிகாரிகள், ஊழியர்கள்இ பிரதியமைச்சரின் குடும்பத்தினர், என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பெருந்தோட்ட மக்கள் 200 வருட காலம் அனுபவித்த வந்த பிரச்சினைகளுக்கு, தற்போதைய அரசாங்கத்தில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும்
பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அதன்போது தெரிவித்தார்.









