இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் கலைஞர்களுக்கும் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க ஆகியோர் தலைமையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகிடும் நிகழ்வு இடம்பெற்றது. குறைந்த வருமானம் பெறுவோர் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 1996 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டுள்ளது.
வீடுகள் பேலியகொட ,தெமட்டகொட ,மொரட்டுவ ,மாஹரகம மற்றும் கொட்டாவ ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்க திட்டமிடபட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பேலியகொடை பகுதியில் 615 வீடுகளும், தெமட்டகொட பகுதியில் 586 வீடுகளும், மொரட்டுவ பகுதியில் 575 வீடுகளும், மஹரகம பகுதியில் 112 வீடுகளும், கொட்டாவ பகுதியில் 108 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன.
சிரேஷ்ட கலைஞர்களுக்காக 108 வீடுகள் நிர்மாணிப்படவுள்ளதாகவும் அவை கொட்டாவ பகுதியில் நிர்மானிக்கபடவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீன அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் வீடுகள் நிர்மானிக்கபடவுள்ளன. மூன்று வருடங்களில் வீடுகள் நிர்மானித்து வழங்கப்படும். திட்டத்திற்காக சீன அரசாங்கம் 24.48 பில்லியன் ரூபாய் நிதியுதவி அளிக்கிறது.









