ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ம், 5ம் மற்றும் 6ம் திகதிகளில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
செப்டம்பர் மாதம் 4 ம் திகதி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு தபால் மூல வாக்கெடுப்பை நடத்துவதற்கான அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விசேட நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் செப்டம்பர் மாதம் 4ம், 5ம் மற்றும் 6ம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்காக செப்டம்பர் மாதம் 11ம் மற்றும் 12ம் திகதிகள் வாக்களிப்புக்கான மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.









