பெரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நேற்றையதினம் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தன.
பதக்கப்பட்டியலில் 40 தங்கம் 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் அடங்கலாக 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தை பிடித்தது.
இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்ட சீனா 40 தங்கம் 27 வெள்ளி 24 வெண்கல பதக்கங்களைப் பெற்றது.
பிரித்தானியா 65 பதக்கங்களுடன் 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
33 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் 26 ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பெரிசில் பிரமாண்டமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்து 714 வீர , வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர். உலகின் கவனத்தை ஈர்த்த பெரிஸ் ஒலிம்பிக் திருவிழா நேற்றிரவு கோலாகலமாக நிறைவடைந்தது.
இறுதியில் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்போட்டிகள் நடக்க உள்ள அமெரிக்காவிடம் ஒலிம்பிக் கொடி ஒப்படைக்கப்பட்டது.









