ஈக்வடோரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
மத்திய ஈக்வடோரின் பானோஸ் டி அகுவா சண்டா ( Banos de Agua Santa) நகரிலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய அனர்த்த முகாமைத்துவ செயலகம் தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில் 30 பேரைக் காணவில்லை அறிவிக்கப்பட்டபோதும் பின்னர் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.









