ஈரான் வடகிழக்கு கேஷ்மர் பகுதியில் 4.9 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
அனர்த்தத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்ததுடன், 120 ற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நிலஅதிர்வின்போது கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகள் மற்றும் கட்டிடங்களிலிருந்து வெளியேறி, பொது வெளிகளில் தஞ்சமடைந்தனர்.
சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், அனர்த்தங்களும் பதிவாகியுள்ளன.
இதேவேளை கடந்த 2003ம் ஆண்டு ஈரானின் தென்கிழக்கு நகரமான பாமில் 6.6 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 31,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.









