சீன பிரதமர் லீ கியாங், செம்சுங் நிறுவனத்தின் தலைவருடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சீனா சர்வதேச நிறுவனங்களுக்கான சந்தை வாய்ப்பை எப்போதும் வழங்க தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான முத்தரப்பு உச்சிமாநாட்டுக்கு முன்னர், தென்கொரிய தலைநகர் சியோலில் செம்சுங் நிறுவனத்தின் தலைவர் லீ ஜே யொங்கை சந்தித்து பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்மார்ட் போன் மற்றும் அவற்றுக்கு சிப்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான செம்சுங், இலத்திரனியல் உபரகண சந்தையிலும் தொடர் ஆதிக்கத்தை நீண்ட காலமாக தக்கவைத்துள்ளது.
அத்தோடு பெருமளவு முதலீடுகளையும் செம்சுங் நிறுவனம் பல்வேறு நாடுகளில் மேற்கொள்கிறது. தொடர்ந்தும் சீனா செம்சுங் உள்ளிட்ட தென்கொரிய நிறுவனங்களின் முதலீடுகளை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும், அதற்கான சந்தர்ப்பம் சீனாவில் உள்ளதாகவும் சீன பிரதமர் லீ கியாங் தெரிவித்துள்ளார்.









