வரலாற்று சிறப்புமிக்க நுவரெலிய சீதையம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு எதிர்வரும் 17ம் திகதி கொழும்பு மயூராபதி அம்மன் ஆலயத்திலிருந்து விசேட பூஜை வழிபாடுகளுடன் தீர்த்த ஊர்வலம் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த ஊர்வலமானது கொள்ளுப்பிட்டியவிலுள்ள இந்திய தூதரகம் நோக்கி பயணித்து, காலி வீதியூடாக, ஆமர் வீதி, கடுவலை, அவிசாவளை, யட்டியந்தோட்டை வழியாக தலவாக்கலைக்கு பயணிக்கவுள்ளது. ரம்பொடை ஸ்ரீ ஹனுமான் ஆலயம் வரை முதல் நாள் ஊர்வலம் பயணிக்கவுள்ளது.
18ம் திகதி ரம்பொடை ஹனுமான் ஆலயத்தின் பூஜை வழிபாடுகளின் பின்னர் ஊர்வலம் மீண்டும் நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தை நோக்கி செல்லவுள்ளது.









