நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதன் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் நிதியைக் கொண்டு எதிர்காலத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிக நிதியை வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் அன்றி, இளைஞர்களே நாட்டின் தேசிய வளமாவர் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இன்று பல அரச நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு சுமையின்றி இயங்கி வருவதாகவும், இவ்வருட இறுதிக்குள் ஸ்ரீலங்கன் விமான சேவைகளுக்கான கொடுப்பனவுகளில் இருந்து விடுபட அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
காலி – வலஹன்துவ பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ரு{ஹணு பல்கலைக்கழகத்தின் புதிய சுகாதார விஞ்ஞான பீடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.









