நாட்டின் சில மாவட்டங்களில் நாளை கடும் வெப்பமான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வவுனியா, முல்லைத்தீவு,திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு,அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு கடுமையான வெப்பம் நிலவக்கூடுமென எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மதிய நேரங்களில் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு, ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே பொதுமக்கள் இதுகுறித்து கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டும். போதுமான அளவு நீர் அருந்துதல், வெயிலில் செல்வதைத் தவிர்த்தல், நிழலில் இளைப்பாறுதல், இலகுவான பருத்தி உடைகளை அணிவதானூடாக வெயிலினால் உடலுக்கு ஏற்படும் தாக்கத்தை சற்று குறைத்துக்கொள்ள முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.








