ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தின் (JICA ஜெய்கா ) சிரேஷ்ட உப தலைவர் Shohei Hara உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அலரிமாளிகைக்கு சென்ற குழுவினர் பிரதமருடன் கலந்துரையாடினர். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் அதன் முன்னேற்றம் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.









