பங்களாதேஸ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தீவிர ஆதரவாளரான மொஹமட் ஷஹாபுதீனுக்கும், தற்போதைய பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கும் மோதல் இருந்த நிலையில் தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மருத்துவ சிகிச்சைக்காக தாய்லாந்து சென்றுள்ள பாராளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தீன் அகமட் திரும்பி வந்த பின்னர் ஜனாதிபதி தனது ராஜினாமாக் கடிதத்தைக் கையளிக்கவுள்ளதாகவும், அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.








