நாட்டில் எரிவாயு விநியோகம் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டுவருவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் போதுமான அளவு எரிவாயு கையிருப்பு காணப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இம்மாத்தில் மாத்திரம் 20 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டுக்கு கொண்;டு வரப்பட்டுள்ளதோடு, மேலும் 17 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எவ்வித தட்டுப்பாடுமின்றி தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியுமெனவும், மக்கள் வீண் அச்சம் கொள்ளத்தேவையில்லையெனவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.









