ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 22ம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளார்.
அதன்போது உலக தலைவர்கள் மற்றும் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். ஐ.நா பொதுச்செயலாளர் என்டோனியோ குட்ரெசையம் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.
இதேவேளை அமெரிக்காவுக்கான விஜயம் நிறைவடைந்ததும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் 26ம் திகதி ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
27ம் திகதி நடைபெறும் உலக வர்த்தக கண்காட்சியில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி , ஜப்பானின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.









