சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மேலும் 15 இலங்கை பாதாள உலக குழு உறுப்பினர்கள் வௌிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்யா, ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியாவில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
சந்தேக நபர்களில் தேடப்பட்டுவரும் பாதாள குழு உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களும் உள்ளடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர்களை அந்தந்த நாடுகளின் சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை வெளிநாடுகளில் வசிக்கும் தேடப்பட்டுவரும் சந்தேக நபர்களை கைதுசெய்ய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.









