எல்ல – வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பஸ் வண்டியின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பஸ் வண்டியை உரிய முறையில் பராமரிக்காமை தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 4ம் திகதி தங்காலையிலிருந்து சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் வண்டி, எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல – வெல்லவாய வீதியின் 24 வது மைல் கல் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பஸ் வண்டியின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார் .









