நாட்டின் பல பகுதிகளிலும் இன்று சீரற்ற வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.00 மணியின் பின்னர் இடியுடன் கூடிய பலத்த மழைக்கான சாத்தியம் காணப்படுகிறது. சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
மேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சிறியளவிலான மழைவீழ்ச்சி பதிவாகும்.
இதனிiடையே இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கமும் ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை கடற்பிராந்தியங்களிலும் இன்றைய தினம் காற்றின் வேகம் சற்று அதிகரித்து காணப்படும். இதனால் சில பகுதிகளில் கடல் கொந்தளிப்பும் ஏற்படக்கூடும். இது குறித்து மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் இருக்கவேண்டுமெனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.









