தென்மேற்கு மெக்சிகோவில் பஸ்சொன்று சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோ நகரத்திலிருந்து வடமேற்கே சுமார் 115 கிமீ தொலைவில் தொழிற்துறை வலயத்தில் விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 60 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கு மெக்சிகோ பொலிசாருக்கு அந்நாட்டு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது.









