மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஞ்சிகாவத்தை பகுதியில் காணப்படும் தனியார் வங்கியொன்றுக்கு முன்பாக இன்று (06) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளpல் வருகைதந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் அடுத்தக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை நீர்கொழும்பு ,குட்டுதுவ பகுதியிலுள்ள வீடொன்றை இலக்காக கொண்டு மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இன்று (06) அதிகாலை 1:38 மணியளவில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளதாகவும், துப்பாக்கி பிரயோகத்தினால் வீட்டிலிருந்தவர்களுக் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









