இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு மண் சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாரிய அழிவு ஏற்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வைஷ்ணவி தேவி கோவிலுக்கருகில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்குண்டு சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் சிலர் காணாமல்போய்யுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தொடரும் மழையினால் மீட்பு நடவடிக்கைகளில் சிரமம் காணப்படுவதாகவும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.









