Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

8 நிமிடங்களில் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 2,510 மாணவர்கள்

ஆவணி 25, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, பாடசாலை நிகழ்வுகள், முதன்மை செய்தி
A A
8 நிமிடங்களில் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 2,510 மாணவர்கள்

வரலாற்றில் முதல் முறையாக எபாகஸ் மனக் கணித முறையில் 2,510 மாணவர்கள் இணைந்து 8 நிமிடங்களில் 554,500 கணக்குகளுக்கு விடையெழுதி சோழன் உலக சாதனை படைத்தனர்

யூசீமாஸ் எனப்படும் எபாகஸ் பயிற்சி நிறுவனம் குறித்த நிகழ்வை அலரி மாளிகையில் ஒழுங்குசெய்திருந்தது.
இலங்கையின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த சிறந்த பயிற்சி பெற்ற மாணவர்கள் 2510 பேர் சாதனை முயற்சியில் பங்கேற்றனர்.

இந்தியாவை தலமையாகமாக கொண்டுள்ள சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் சார்பில் தமிழ்நாட்டில் இருந்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் ரோபோ விஞ்ஞானி கார்த்திகேயன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்களான சுகிர்தா, வனிதா ,செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் மற்றும் அமெரிக்காவிலிருந்தும் சிறப்பு நடுவர்களும் உலக சாதனை நிகழ்வைக் கண்காணித்து உறுதிச்செய்துள்ளனர். அவர்களுடன் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் நடுவர்கள் 15 பேரும் இணைந்து உலக சாதனை படைக்கும் முயற்சியைக் கண்காணித்தனர்.

சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் 2,3,4இ எண்கள் கொண்ட கூட்டல், பெருக்கல்,கழித்தல் மற்றும் வகுத்தல் கணக்குகளுக்கு விடையளித்தனர். கணக்குகள் 2 முதல் 10 அடுக்குகள் வரை வரிசைப்படுத்தப்பட்டிருந்தன.

சோழன் உலக சாதனை படைத்த மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் நடுவர்களினால் வழங்கப்பட்டன.

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் ரொபோ விஞ்ஞானி கார்த்திகேயன் குறிப்பிடுகையில் உலக வரலாற்றில் எபாகஸ் மனக் கணித முறையில் மிகவும் கடினமான மற்றும் அதிக எண்ணிக்கையிலான கணக்குகளுக்கு 8 நிமிடங்களில் தீர்வு எழுதியது இதுவே முதல் முறை என சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவானி ராஜா, பொதுச் செயலாளர் ருக்சான், உதவிச்செயலாளர் கதிரவன் இன்பராசா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

யூசிமாஸ் நிறுவனத்தின் இலங்கைக் கிளைக்கான தலைமை நிர்வாக அதிகாரி சிவசங்கர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சித்ரா இளமைநாதன் ஆகியோர் நிகழ்வைத் தலைமையேற்று நடத்தினர்.

சோழன் உலக சாதனை படைக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..

முந்தைய செய்தி

பூண்டுலோயா, டன்சினன் தோட்டத்தில் தீப்பரவல். 30 பேர் தற்காலிக தங்குமிடத்தில்

அடுத்த செய்தி

பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில்

தொடர்புடைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு  – கர்தினால்
அண்மைய செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு – கர்தினால்

ஆடி 30, 2026
பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு

ஆடி 29, 2026
கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின்  ஆடி வேல் வெள்ளிரத பவனி 
அண்மைய செய்திகள்

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி வேல் வெள்ளிரத பவனி 

ஆடி 29, 2026
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

எதிர்கால சந்ததி கடன் செலுத்த அவசியமற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே நோக்கம்! ஜனாதிபதி

ஆடி 29, 2026
காணாமல் போனோர் தொடர்பில் கதைக்க ஜெனீவா  செல்லும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
அண்மைய செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

ஆடி 29, 2026
அடுத்த செய்தி
பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில்

பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.