கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளது.
தபால் துறையில் நிலவும் கடுமையான பணிச்சூழல் மற்றும் நிர்வாக அலுவலக ஊழியர்கள் மீதான அழுத்தங்களைக் கண்டித்தே போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் துறையில் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
கூட்டு அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு முதல் தபால் துறையில் முறையான ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை என்பது இந்தப் போராட்டத்தின் முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
.









