முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய தினம் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் துமிந்த திசாநாயக்க ஆஜர்படுத்தப்பட்டார்.
கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு தொகுதியில் வசிக்கும் பெண்ணொருவரின் வாகனத்திலிருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட வு-56 துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடந்த மே மாதம் 23ம் திகதி கைது செய்யப்பட்டார்.
இந்த குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பெண்களும் ஆணொருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது வெளியான தகவல்களுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டமை சுட்டிக்காட்டதக்கது.









