சீரற்ற வானிலையால் நாட்டின் 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளைஇ கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கையை வழங்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன் கொழும்பு, கம்பஹா, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் அனர்த்தம் காரணமாக இதுவரையில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
42,624 குடும்பங்களைச் சேர்ந்த 479,871 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 103 வீடுகள் முழுமையாகவும், 2,635 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
8,470 குடும்பங்களைச் சேர்ந்த 27,517 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.









