நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதனை கருத்திற்கொண்டு உணவு மற்றும் பானங்களை கொள்வனவு செய்யும் போது மற்றும் உட்கொள்ளும் போது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை பாடசாலை விடுமுறை காலம் என்பதால், பிள்ளைகள் குறித்தும் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். மழைநீரில் விளையாடுவது, பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்வது, மின்சாரம் உள்ளிட்ட ஆபத்தான விடயங்களை கையாளும்போதும் சிறுவர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். பெற்றோரும் அவர்கள் தொடர்பில்கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.









