சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளனர். நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான பிரதிநிதிகளுக்கும், சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
புதிய பொருளாதார கொள்கைகள் முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதன் தேவை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் இலங்கையின் 2.9 பில்லியன் டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வு அக்டோபர் நடுப்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒக்டோபர் மாதத்தில் இலங்கையின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதோடு, எதிர்வரும் நவம்பரில் எதிர்பார்க்கப்படும் அடுத்த நிதியுதவி வழங்கப்படுவதை அந்த குழு தீர்மானிக்கும்.









