சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நாளை ஒக்டோபர் முதலாம் திகதி பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் நாளை தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை வளாகத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணிவரை பல நிகழ்வுகளும் சிறுவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிறுவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துதல்இ இயற்கை வளங்கள்இ சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த மனப்பான்மையை மேம்படுத்துதல்இ குழந்தைகளின் திறன்களை மேம்படுத்துதல்இ பொழுதுபோக்கை வழங்குதல் போன்ற பல நோக்கங்களின் அடிப்படையில் நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.









