அடுத்தவருடமளவில் வாகன இறக்குமதி ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடியதன் பின்னர் தீர்வு காண்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கண்டி மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதன்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். வரி உயர்வால் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் கடினமான காலமாக இருந்தது. தற்போது பொருளாதாரம் மெல்ல மெல்ல முன்னேறி வருகிறது. முதன்மை வரவு செலவு உபரியை பராமரிக்க முடிந்தது. இந்த நடவடிக்கை தனியார் துறையை பாதிக்கிறது. ஐ.எம்.எப் உடன் 6 மாதங்களுக்கு ஒருமுறை கலந்துரையாடல் நடத்தப்படும். இதன் ஊடாக வளர்ச்சி ஏற்படுகிறது. வரிச் சிக்கல்களைத் திருத்த ஐ.எம்.எப் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு மற்றும் கருத்து வேறுபாடுகளும் உள்ளன. எதிர்வரும்; ஆண்டில் அந்நிய செலாவணி கையிருப்பு குறையும். அதன்போது வாகனங்கள் இறக்குமதி ஆரம்பிக்கப்படும். எமக்கு வாகனங்கள் இன்றி இருக்க முடியாது. வருவாயில் பெரும் பகுதி வாகன வரி மூலம் வருகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் நல்ல முன்னேற்றம் ஏற்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.









