அவுஸ்திரேலியாவில் ஹோட்டல் ஒன்றின் மீது ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இன்று அதிகாலை 2 மணியளவில்விபத்து இடம்பெற்றுள்ளது.
விமானியுடன் சேர்த்து இருவர் பயணித்த ஹெலிகொப்டர் அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியிலுள்ள கெய்ர்ன்ஸ் நகரில் அமைந்துள்ள ஹில்டன் டபுள் ட்ரீ ஹோட்டலின் மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹெலிகொப்டர் விழுந்தவுடன் தீப்பற்றி எரிந்ததால் சம்பவ இடத்திலேயே விமானி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தினால் ஹோட்டலில் இருந்தவர்களுக்கு எதுவித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் சுமார் 100க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.









