புதிய பஸ் கட்டண திருத்தம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. வருடாந்த பஸ்கட்டண திருத்தத்திற்கு அமைய கட்டண திருத்தம் நடைமுறைக்கு வருகிறது. பஸ்கட்டணங்களை 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
அதற்கமைய இதுவரை 30 ரூபாவாக இருந்த ஆகக்குறைந்த பஸ்கட்டணம் 34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு இணையாக சொகுசு பஸ் கட்டணங்களும் , அதிவேக வீதிகளுக்கான பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நடைமுறைக்கு வரும் புதிய பஸ் கட்டண திருத்தம் குறித்து பஸ் ஊழியர்களுக்குத் தெளிவுபடுத்தி, பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான சோதனைகள் இன்று முதல் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.









