ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்திற்கும், போக்குவரத்து துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் விசாரணைகளை முன்னெடுத்து தமது பிரச்சினைக்கு தீர்வு வழங்க உறுதியளிக்கபட்டதை அடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவிக்ப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று(10) பயணிகள் ரயில் சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கபடுமெனவும், பயணிகள் எவ்வித தடையுமின்றி பயணிக்க முடியுமெனவும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் சரக்கு போக்குவரத்து ரயில் ஊழியர்கள் மாத்திரம் குறித்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளமை குறிப்பிடதக்கது.









