முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவை கைதுசெய்மாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் அவர் ஆஜராகாமை காரணமாக, மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க இன்று (22) பிடியாணை உத்தரவிட்டுள்ளார்.
மாத்தறை எளியகந்த வீதிஇ, பிரவுன்ஸ்ஹில் முகவரியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணியைக் கொள்வனவு செய்தமை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக பொலிஸ் நிதி குற்றப் விசாரணை பிரிவினால் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் பிரதிவாதியான பெசில் ராஜபக்ஷ இன்றைய தினம் முன்னிலையாகாமை காரணமாகவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்போது பெசில் ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், பெசில் ராஜபக்ஷ உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதனால் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக மாட்டாரென வைத்திய அறிக்கைகளை சமர்ப்பித்து தெரிவித்துள்ளனர்.
எனினும், பெசில் ராஜபக்ஷ தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சமூகமளிப்பதைத் தவிர்த்து வருவதனால், முன்வைக்கப்பட்ட காரணிகளை கருத்திற்கொண்டு, மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க, பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..









