ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் வெஞ்சர் பிரதேசத்தில் இன்று (22) காலை தனியார் பஸ்வண்டியும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் வண்டியே விபத்துக்குள்ளான நிலையில் பஸ வண்டியில் பயணித்த மாணவர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில், டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது பஸ வண்டியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 20 பேர் வரையில் பயணித்துள்ளனர். எனினும் ஏனையவர் எவ்வித பாதிப்புமின்றி தப்பியுள்ளனர்.









