தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வு இன்று பத்தரமுல்லையில் படை வீரர்கள் நினைவிடத்திற்கு முன்பாக ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
யுத்த வெற்றியின் 17 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பங்கேற்புடன் நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வில் முதன்முறையாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த படைவீரர்களின் உறவினர்களும் கலந்துகொள்கின்றனர்.
இராணுவம்இ கடற்படை, விமானப்படை,பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், தேசிய மாணவர் படையணி, படை வீரர்கள் சேவை அதிகாரசபை மற்றும் படை வீரர்களின் பெற்றோர்கள்,உறவினர்கள் மற்றும் விசேட அழைப்பாளர்கள் உட்பட 2,769 பேர் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக படை வீரர்கள் சேவை அதிகாரசபையின் பணிப்பாளர் குரூப் கேப்டன் எல்.எம்.சி.டி.நிஸங்க தெரிவித்துள்ளார்.









