இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (18) கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக பயணமாகியுள்ளார்.பிரதமருடன் மேலும் இரண்டு பிரதிநிதிகளும் பயணித்துள்ளனர்.
அவர்கள் இன்று பிற்பகல் 01.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்தின் லண்டன் நகர் நோக்கி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான யு.எல்.- 403 (UL- 403) ரக விமானத்தில் பயணித்துள்ளனர்.
எதிர்வரும் 23ம் திகதி மீண்டும் தாயகம் திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









