மல்வானை பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் வீட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இன்று (18) பிரதமருடன் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் சசிந்து பெரேரா தெரிவித்துள்ளார்.
முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலில் காணியை கூடிய விரைவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதால், குறித்த வளாகத்தில் இருந்து வெளியேறி செல்வதற்கு தமது குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மல்வானை சர்ச்சைக்குரிய காணியை விரைவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.
தமது கோரிக்கைக்கு அரசாங்கத் தரப்பிலிருந்து ஒரு பதில் கிடைத்துள்ளதாகவும்
அதனடிப்படையிலேயே மல்வானை காணியில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் சசிந்து பெரேரா குறிப்பிட்டுள்ளார்.









