மக்களுக்கு தொடர் சேவைகளை வழங்குவதற்கென இன்று (15) நாளை (16) மற்றும் நாளை மறுதினம் (17) அனைத்து அரச நிறுவனங்களும் அலுவலகங்களும் வழமைப்போல் திறந்திருக்குமென பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, அரச ஊழியர்களுக்கு கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மாத்திரம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று முதல் அரச நிறுவனங்கள் மற்றும் அலுவலங்களின் செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெறும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.









