பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போதைய வறண்ட வானிலையை முன்னிட்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்திலும் வறண்ட வானிலை தொடர்ந்து மோசமடைந்தால், தண்ணீர் விநியோகத்தில் சில சிரமங்கள் ஏற்படக்கூடுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் சந்தன பண்டார கூறியுள்ளார்.
இதனிடையே நாட்டின் பல பகுதிகளில் குடிநீரை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மலையகத்தில் நீருக்காக இயற்கை ஆதாரங்களை நம்பி வாழும் மக்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.









