பாகிஸ்தான் கராச்சி நகரில் தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை மற்றும் இடி , மின்னல் தாக்கம் காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
புயல்காற்று வீசிவருவதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை பாதிப்புக்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக கராச்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீடுகள் பல சேதமடைந்துள்ளதாகவும், மின் கம்பிகள் அறுந்து வீழ்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்தும் பல இடங்களில் மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென கராச்சி அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.









