அமெரிக்க – இஸ்ரேல் கூட்டு தாக்குதலினால் ஈரானில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிலையம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெப்ரவரி 28 ஆம் திகதி யுத்த நடவடிக்கை ஆரம்பமானது முதல் இதுவரையில் ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,186 ஆக அதிகரித்துள்ளதாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் ஆயிரத்து 394 பேர் பொதுமக்கள் என்றும்,அவர்களில் குறைந்தது 210 சிறுவர்களும் அடங்குவதாகவும் மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிலையம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.









