2025 ம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண தொடரின் இறுதிப்போட்டி இன்றைய தினம் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.
இரு நாட்டு ரசிகர்களுக்கும் கூடுதல் எதிர்பார்ப்பை வழங்கியுள்ள இறுதிப்போட்டி உலகின் ஏனைய நாட்டு கிரிக்கட் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய கிண்ண தொடரொன்றில் இறுதிப்போட்டியில் இந்திய – பாகிஸ்தான் அணிகள் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இம்முறை ஆசிய கிண்ண தொடரில் மூன்றாவது முறையாக இரு அணிகளும் ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன.
ஏற்கனவே முதல் சுற்று மற்றும் சுப்பர் 4 சுற்றுக்களில் இரு அணிகளும் ஒன்றையொன்று எதிர்கொண்ட நிலையில், இந்திய அணி குறித்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இன்றைய இறுதிப்போட்டி கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு அணிகளும் போட்டியின்போது கைலாகு கொடுப்பதை தவிர்த்து வரும் நிலையில் , நேற்றைய தினம் ஆசிய கிண்ணத்துடன் இரு அணிகளின் தலைவர்களின் புகைப்படம் எடுக்கவிருந்த நிலையில், அதனை பாகிஸ்தான் அணியின் தலைவர் நிராகரித்துள்ளார்.
போட்டி இன்றைய தினம் இரவு 8 மணியளவில் டுபாயில் ஆரம்பமாகவுள்ளது.









