கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம் 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 01 முதல் 15 வரை , பத்தரமுல்ல, பெலவத்த, கொஸ்வத்த,தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான,மாதிவெல நுகேகொட, நாவல, மஹரகம, பொரலஸ்கமுவ, இரத்மலானை,தெஹிவளை, மொரட்டுவை ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.









