இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைதுசெய்யப்பட்ட நிலையில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஐவரும் தடுத்தவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும், மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவிலும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 72 மணி நேர தடுப்பு காவல் உத்தரவின் கீழ் அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.









