குளியாப்பிட்டியவில் நேற்று நடைபெற்ற வாகன விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்களை சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் நாமல் சுதர்சன உள்ளிட்ட அரச அதிகாரிகள் இன்று பார்வையிட்டனர்.
பாடசாலை வேன் விபத்தில் காயமடைந்த மாணவர்களின் நிலை குறித்து ஆராய அரச அதிகாரிகள் குருநாகல் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
குறித்த விபத்தில் 02 மாணவர்கள் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் உயிரிழந்தனர் காயமடைந்தவர்கள் தற்போது குருநாகல் போதனா வைத்தியசாலையிலும் குளியாபிட்டிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரதியமைச்சர்களான நாமல் சுதர்சன,நாமல் கருணாரத்ன, வடமேற்கு மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய உள்ளிட்டோருடன் அரச அதிகாரிகளும் குருநாகல் வைத்தியசாலைக்கு சென்று மாணவர்களிடம் நலனை விசாரித்தனர்.
மாணவர்களின் உடல்நலம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.









