ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்தையும், தனிப்பட்ட தேவைகளுக்காக அவர், நாட்டிற்குள் மேற்கொள்ளும் பயணத்தையும் ஒப்பிட முடியாதென, தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தனிப்பட்ட விஜயங்களுக்காக உத்தியோகபூர்வ வாகனத்தையும், பாதுகாப்பு பிரிவினரையும் ஜனாதிபதி பயன்படுத்த முடியுமா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, அமைச்சர் இவ்விடயத்தை குறிப்பிட்டார்.
பொது நிதியைப் பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஐக்கிய இராச்சியத்திற்கு தனிப்பட்ட முறையில் சென்றது தவறு. தனிப்பட்ட விஜயங்களுக்காக விமானத்தின் இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிப்பதில் தவறில்லை.
ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க நாட்டுக்குள் மேற்கொண்ட பயனத்தை முன்பதிவு செய்து கொண்டே சென்றிருந்தார்.
அரச ஊழியர்களுக்கு கூட தனிப்பட்ட தேவைகளுக்காக அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு விசேட ஏற்பாடுகள் உள்ளன. ரணிலின் நிலைமை இவ்வாறு இருக்கவில்லை.
பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியே, ரணில் லண்டன் சென்றிருந்தார். இது குறித்து பலரது சாட்சியங்களையும் பெற்றிருந்தோம். சட்டம் சகலருக்கும் சமமாகப் பயன்படுத்தப் பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
இலங்கையில் முதல் முறையாக மக்கள் இதைப் பார்க்க முடிந்துள்ளது. பொதுமக்கள் இதைப் பற்றி மகிழ்ச்சியடைவதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.









