முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்று பிரதமர் ஹரிணி அமரசூரிய பார்வையிட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதென பிரதமர் தரப்பு அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் ஹரிணி அமரசூரிய மைத்திரி விக்ரமசிங்கவுடன் சென்று பார்வையிட்டுள்ளதாக போலிச்செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் ,பிரதமர் ஹரினி அமரசூரிய அவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு செல்லவில்லையெனவும் பிரதமரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
உறுதிப்படுத்தாத போலிச்செய்திகளை வெளியிடுவோர் குறித்து சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.









