பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள நடிகை சமந்தா, இத்துறையிலிருந்து விரைவில் விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் படத்தயாரிப்பு உட்பட மேலும் பல தொழில்களில் ஈடுபடுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அவர் தெலுங்கில் தயாரித்து வெளியிட்ட சுபம் எனும் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது. இந்நிலையில் தான் நடிப்பதிலிருந்து விலகுவது குறித்து தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளதாக நடிகை சமந்தா அறிவித்துள்ளார்.








